காரில் வைத்திருந்த ரூ.7.50 லட்சம் திருட்டு

பாகலுார்: தர்மபுரி மாவட்டம், தேக்கம்பட்டி அக்ரி நகரை சேர்ந்தவர் ஆறு-முகம், 55. கடந்த, 6ம் தேதி, பாகலுாரிலுள்ள சார்பதிவாளர் அலு-வலகத்தில், தன் நிலத்தை மற்றொரு நபருக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்து விட்டு, 7.50 லட்சம் ரூபாயை வாங்கி, தன் மாருதி ஆல்டோ காரில் வைத்தார்.

நண்பர்களிடம் பேசி விட்டு, ஊர் திரும்பினார். அப்போது காரில் வைத்திருந்த பணத்தை காணாமல் அதிர்ச்சியடைந்த அவர், நேற்று முன்தினம் இரவு அளித்த புகார் படி, பாகலுார் போலீசார், காரில் பணத்தை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Advertisement