கார் விபத்தில் விவசாயி பலி

பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த ஏ.பள்ளிப்பட்டியை சேர்ந்தவர் புஷ்பலிங்கம், 70. விவசாயி.

இவர் நேற்று காமராஜர் நகரிலுள்ள தன் தோட்டத்தில் இருந்து, ஹீரோ ஹோண்டா பிளசர் பைக்கில் ஏ.பள்ளிப்பட்டிக்கு சென்றார். சேலம் - அரூர் தேசிய நெடுஞ்சா-லையில் அதிகாரப்பட்டி பஸ் நிறுத்தத்தில் மதியம், 1:30 மணிய-ளவில் சாலையை கடக்கும் போது, சேலத்திலிருந்து அரூர் நோக்கி அதிவேகமாக வந்த டொயோட்டோ இடியஸ் கார் மோதி-யதில் பலியானார். ஏ.பள்ளிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர். தப்பியோடிய டிரைவரை தேடி வருகின்றனர்.

Advertisement