மாநகரில் அள்ளப்படாமல் தேங்கும் குப்பை கேள்விக்குறியாகும் பொது சுகாதாரம்
ஈரோடு: மாநகரில் அள்ளப்படாமல் தேங்கும் குப்பையால், பொது சுகா-தாரம் கேள்விக்குறியாகி வருகிறது.
ஈரோடு மாநகராட்சியில் தினமும் துாய்மை பணியாளர்கள் ஒவ்-வொரு வீடு, கடைகள், அலுவலகங்களில் குப்பைகளை சேக-ரித்து மக்கும், மக்காத குப்பைகளை எடுத்து செல்கின்றனர். பொது இடங்களில் குப்பையை கொட்டுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி எச்சரிக்கை விடுத்து வருகிறது. சில இடங்களில் அபராதமும் விதிக்கிறது. ஆனால் மாநகராட்-சிக்கு உட்பட்ட இடத்தில் மாநகராட்சி நிர்வாகமே குப்பையை வீடு, வீடாக சென்று வாங்காமல் பொது இடத்தில் இன்னமும் குப்பையை கொட்ட வைக்கும் அவலம் தொடர்கிறது.
இதுபற்றி பொதுமக்கள் கூறியதாவது: வெண்டிபாளையம், கோணவாய்க்கால் உள்ளிட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் குப்பை தொட்டிகளை வைத்துள்ளனர். இதில் அப்பகுதி மக்கள் குப்-பையை கொட்டுகின்றனர். இதை முறையாக துாய்மை பணியா-ளர்கள் அப்புறப்படுத்துவதில்லை. இதனால் குப்பை மலை போல் தேங்கி கிடக்கிறது. தெருநாய்கள் இழுத்து கடித்து, குதறி அசுத்தம் செய்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. பொது இடத்தில் குப்பை கொட்ட வைத்தவர்களுக்கு யார் அப-ராதம் விதிப்பது? எனவே இப்பகுதிகளில் குப்பையை தேங்க விடாமல் துாய்மை செய்ய இனி வரும் காலங்களில் நடவடிக்கை எடுக்க மாநகராட்சி நிர்வாகம் முன் வர வேண்டும். இவ்வாறு கூறினர்.
மேலும்
-
மதுபோதையில் தண்டவாளத்தில் கற்களை போட்டு அட்டகாசம் செய்த நால்வர் கைது சிக்னல் கிடைக்காததால் சேரன் எக்ஸ்பிரஸ் தப்பியது
-
பத்திரிக்கையாளர் மீது உருட்டு கட்டை தாக்குதல்
-
அமெரிக்காவில் வெடித்த கலவரம்; கடும் நடவடிக்கை எடுக்க டிரம்ப் உத்தரவால் பரபரப்பு
-
2 கிலோ கஞ்சா சாக்லேட் கடத்தியவர்களுக்கு வலை
-
சத்யவதி என்ன தவறு செய்தார்? முதல்வர் சித்தராமையா 'வக்காலத்து'
-
இன்று முதல் மீண்டும் மழை துவக்கம்