வைகாசி மாத வளர்பிறை முகூர்த்தத்தால் கோவில்களில் களை கட்டிய திருமணம்

கோபி: வைகாசி மாத வளர்பிறை சுப முகூர்த்த தினமான நேற்று, கோபியில் பிரசித்தி பெற்ற பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவிலில் காலை 6:00 முதல், 7:00 மணிக்குள் ஏழு ஜோடிக-ளுக்கு திருமணம் நடந்தது. அதேபோல் பச்சைமலை முருகன் கோவிலில், அதிகாலை, 4:00 முதல், 7:00 மணிக்குள், 12 ஜோடி-களுக்கும், பளவமலை முருகன் கோவிலில், ஒரு ஜோடிக்கும் திரு-மணம் நடந்தது. ஒரே நாளில் மூன்று கோவில்களில், 20 திரு-மணம் நடந்தது. திருமணத்தில் பங்கேற்க படையெடுத்த உறவி-னர்களால், இந்த கோவில்கள் களை கட்டின. திரும்பிய பக்க-மெல்லாம் புதுமண ஜோடிகளும், பட்டுச்சேலை-புத்தாடைகளில் மக்களும் நடமாடியபடி இருந்தனர்.


சென்னிமலையில்...சென்னிமலை முருகன் கோவிலில் மலை கோவிலுக்கு செல்லும் சாலை மேம்பாட்டு பணி நடப்பதால், ஐந்து மாதங்க-ளுக்கு பிறகு திருமணம் நடைபெற நேற்று அனுமதிக்கப்பட்டது. வைகாசி மாத சுப முகூர்த்தம் என்பதால், 10 ஜோடிகளுக்கு திரு-மணம் நடக்க முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. இதனால், 10 திரு-மண தம்பதியர் மற்றும் அவருடன் வந்த உறவினர்கள், மேள-தாளம், கேமராமேன் என கோவிலில் குவிந்தனர். இதனால் ஐந்து மாதங்களுக்கு பிறகு நேற்று தான் கோவில் வளாகம் களை-கட்டியது. திருக்கோவில் அர்ச்சகர்களும், பணியாளர்களும் நீண்ட நாட்களுக்கு பிறகு பரபரப்பாக இயங்கினர்.

Advertisement