வைகாசி மாத வளர்பிறை முகூர்த்தத்தால் கோவில்களில் களை கட்டிய திருமணம்
கோபி: வைகாசி மாத வளர்பிறை சுப முகூர்த்த தினமான நேற்று, கோபியில் பிரசித்தி பெற்ற பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவிலில் காலை 6:00 முதல், 7:00 மணிக்குள் ஏழு ஜோடிக-ளுக்கு திருமணம் நடந்தது. அதேபோல் பச்சைமலை முருகன் கோவிலில், அதிகாலை, 4:00 முதல், 7:00 மணிக்குள், 12 ஜோடி-களுக்கும், பளவமலை முருகன் கோவிலில், ஒரு ஜோடிக்கும் திரு-மணம் நடந்தது. ஒரே நாளில் மூன்று கோவில்களில், 20 திரு-மணம் நடந்தது. திருமணத்தில் பங்கேற்க படையெடுத்த உறவி-னர்களால், இந்த கோவில்கள் களை கட்டின. திரும்பிய பக்க-மெல்லாம் புதுமண ஜோடிகளும், பட்டுச்சேலை-புத்தாடைகளில் மக்களும் நடமாடியபடி இருந்தனர்.
சென்னிமலையில்...சென்னிமலை முருகன் கோவிலில் மலை கோவிலுக்கு செல்லும் சாலை மேம்பாட்டு பணி நடப்பதால், ஐந்து மாதங்க-ளுக்கு பிறகு திருமணம் நடைபெற நேற்று அனுமதிக்கப்பட்டது. வைகாசி மாத சுப முகூர்த்தம் என்பதால், 10 ஜோடிகளுக்கு திரு-மணம் நடக்க முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. இதனால், 10 திரு-மண தம்பதியர் மற்றும் அவருடன் வந்த உறவினர்கள், மேள-தாளம், கேமராமேன் என கோவிலில் குவிந்தனர். இதனால் ஐந்து மாதங்களுக்கு பிறகு நேற்று தான் கோவில் வளாகம் களை-கட்டியது. திருக்கோவில் அர்ச்சகர்களும், பணியாளர்களும் நீண்ட நாட்களுக்கு பிறகு பரபரப்பாக இயங்கினர்.
மேலும்
-
மதுபோதையில் தண்டவாளத்தில் கற்களை போட்டு அட்டகாசம் செய்த நால்வர் கைது சிக்னல் கிடைக்காததால் சேரன் எக்ஸ்பிரஸ் தப்பியது
-
பரஸ்பர உறவையே விரும்புகிறோம்; பிரதமர் மோடிக்கு வங்கதேச இடைக்கால அரசு கடிதம்
-
பத்திரிக்கையாளர் மீது உருட்டு கட்டை தாக்குதல்
-
அமெரிக்காவில் வெடித்த கலவரம்; கடும் நடவடிக்கை எடுக்க டிரம்ப் உத்தரவால் பரபரப்பு
-
2 கிலோ கஞ்சா சாக்லேட் கடத்தியவர்களுக்கு வலை
-
சத்யவதி என்ன தவறு செய்தார்? முதல்வர் சித்தராமையா 'வக்காலத்து'