உயர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை, சென்னை உயர் நீதிமன்றத்திற்கு, 'இ - மெயில்' வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, வளாகம் முழுதும் மோப்ப நாய் உதவியுடன், போலீசார் சோதனை நடத்தினர்.
சமீப காலமாக, வெடிகுண்டு மிரட்டல் விடுவது தொடர்கதையாகி வருகிறது. அந்த வரிசையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமைப் பதிவாளருக்கு, நேற்று மாலை 4:59 மணியளவில் மின்னஞ்சல் ஒன்று வந்தது.
அதில், 'உயர் நீதிமன்ற வளாகம், சி.பி.ஐ., நீதிமன்ற வளாகம், பசுமை வழி சாலையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி வீடு ஆகியவற்றில், மாலை 6:45 மணிக்கு குண்டு வெடிக்கும்' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இது குறித்து, உயர் நீதிமன்ற நிர்வாக பதிவாளர் தரப்பில், போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற வளாகம் முழுதும், மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். சோதனை முடிவில் புரளி என தெரிய வந்தது.
மேலும்
-
'ரெண்டுல ஒண்ணு' தொகுதிகளை பங்கு போட அண்ணாமலை யோசனை
-
ஸ்டாலின் திறந்த சங்ககிரி பஸ் ஸ்டாண்ட் லாரிகள் நிறுத்தும் இடமாக மாறிய அவலம்
-
அமெரிக்கா, பிரிட்டனில் பொறுப்பாளர்கள் த.வெ.க., தலைவர் விஜய் நியமித்தார்
-
பழனிசாமி அமைச்சரவையில் பா.ஜ.,வுக்கு இடம் கிடைக்குமா?
-
மனு பெட்டி சாவிகள் தொலைந்து விட்டதா? ஸ்டாலின் மீது பழனிசாமி சந்தேகம்
-
தி.மு.க., கூட்டணியில் இருந்து பல கட்சிகள் வெளியேறும்: அமைச்சர் முருகன்