காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு கடத்தப்பட்ட பெண் மீட்பு
சேலம், சேலம் மாவட்டம், காடையாம்பட்டி லோகூர் மேல் தெருவை சேர்ந்தவர் அங்கமுத்து மகன் ஞானசேகரன், 31. இவர் சேலம், மாமாங்கம் பகுதியில் உள்ள தனியார் கல்லுாரியில் பஸ் டிரைவராக பணிபுரிகிறார். அதே கல்லுாரியில், ஓமலுார் மாட்டுகாரனுாரை சேர்ந்த திவ்யா, 21, என்பவர் பி.காம்., மூன்றாம் ஆண்டு படித்தார்.
பஸ்சில் மாணவி வந்த போது, டிரைவர் ஞானசேகரனுடன் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்தனர். காதலுக்கு பெண் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் கடந்த, 6ல், இருவரும் ஞானசேகரன் பெற்றோர் முன்னிலையில், அப்பகுதியில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். 7ம் தேதி இருவரும், மாலையில் வலசையூரில் உள்ள ஞானசேகரன் சகோதரி வீட்டிற்கு, இரு சக்கர வாகனத்தில் சென்றனர். மாமாங்கம் பகுதி
யில் வந்தபோது, பின்னால் மூன்று கார்களில் வந்த பெண் உறவினர்கள், ஞானசேகரனை தாக்கி விட்டு, கண்ணிமைக்கும் நேரத்தில் திவ்யாவை காரில் ஏற்றி கடத்தி சென்றனர்.
மயக்க நிலையில் இருந்த ஞானசேகரன், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். அவர் கொடுத்த புகாரில், 'தன்னை தாக்கி விட்டு, கழுத்தில் இருந்த ஒன்றரை பவுன் செயினை பறித்து சென்றதோடு, என் மனைவியையும் கடத்தி சென்றனர்,' என தெரிவித்து இருந்தார்.
கருப்பூர் போலீசார் விசாரணை நடத்தி, உறவினர்களிடம் இருந்து கடத்திய திவ்யாவை மீட்டனர், இதையடுத்து திவ்யா மற்றும் அவரது உறவினர்கள், ஞானசேகரன் ஆகியோரை போலீஸ் ஸ்டேஷன் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில், திவ்யா கணவருடன் தான் செல்வதாக தெரிவித்தார்.
இதனையடுத்து போலீசார், ஞானசேகரனுடன் திவ்யாவை அனுப்பி வைத்தனர்.
மேலும்
-
செமிகண்டக்டர் சிறப்பு மண்டலம் அரசு ஒப்புதல்
-
ரூ.35,000 கோடி முதலீடு டாடா மோட்டார்ஸ் இலக்கு
-
தமிழில் பெயர் பலகை விபாபாரிகள் ஆலோசனை
-
வீட்டுக்கு மட்டுமல்ல விலை; பொது இடத்துக்கும் 40% வசூல் பெருநகர குடியிருப்புகளின் இன்றைய நிலை
-
எச்.டி.எப்.சி., - சி.இ.ஓ., மீது புகார்
-
நவரை நெல் வயல்களில் கருப்பு வண்டுகள் தாக்குதல் வேளாண் விஞ்ஞானிகள் ஆய்வு