மதுரையில் முருக பக்தர் மாநாட்டுக்கு அனுமதி போலீசார் முடிவெடுக்க உயர்நீதிமன்றம் 'கெடு' பக்தர்களுக்கு வழங்க முடியாதா என நீதிபதி கேள்வி
மதுரை: மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு அனுமதி கோரிய மனு மீது, போலீசார் ஜூன் 12 க்குள் முடிவெடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
ஹிந்து முன்னணி மாநிலச் செயலாளர் முத்துக்குமார் தாக்கல் செய்த மனு:
மதுரை பாண்டிகோவில் ரிங் ரோடு வண்டியூர் டோல்கேட் அருகே அம்மா திடலில் ஜூன் 22 ல் 'முருக பக்தர்கள்' மாநாடு நடைபெற உள்ளது. முருகனின் அறுபடை வீடுகளை குறிக்கும் மாதிரி வடிவங்கள் (மினியேச்சர்கள்) மாநாட்டு வளாகத்தில் தற்காலிகமாக நிறுவப்பட உள்ளன. அவற்றின் சிறப்புகள், முக்கியத்துவம் குறித்து பக்தர்களுக்கு ஜூன் 10 முதல் ஜூன் 22 வரை தினமும் காலை 10:00 முதல் மதியம் 12:00 மணிவரை, மாலை 5:00 முதல் இரவு 7:00 மணி வரை விளக்கி, தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அறுபடை வீடுகளின் மாதிரி வடிவங்களை அமைக்க அனுமதிக்க போலீசாருக்கு மனு அனுப்பினோம். போலீஸ் உதவி கமிஷனர் அனுமதி மறுத்தார். அறுபடை வீடுகளின் மாதிரி வடிவங்களை அமைக்க, பூஜைகள் நடத்த அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார்.
நீதிபதி: போலீஸ் தரப்பில் கூறப்படும் ஆட்சேபனைகள் ஏற்புடையதல்ல. அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. பக்தர்களுக்கு வழங்க முடியாதா.
அரசு தரப்பு: சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. விரும்பத்தகாத சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளது. 5 லட்சம் பேர் கந்த சஷ்டி கவசம் பாட உள்ளதாக மனுதாரர் தரப்பு கூறுகிறது. 5 லட்சம் பேருக்கு எப்படி பாதுகாப்பு அளிக்க முடியும். மாநாட்டில் பங்கேற்கும் வி.ஐ.பி.,கள் குறித்த கேள்விக்கு பதில் இல்லை. 20 ஆயிரம் பேர் பங்கேற்பதாக கூறுகின்றனர். தெளிவற்ற பதிலால் பாதுகாப்பு அளிப்பது குறித்து முடிவு செய்ய இயலவில்லை. மாநாட்டிற்கு அனுமதி கோரிய மனு நிலுவையில் உள்ளது. இவ்வாறு விவாதம் நடந்தது.
நீதிபதி: போலீஸ் தரப்பில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு மனுதாரர் தரப்பில் விளக்கமளிக்க வேண்டும். மாநாட்டிற்கு அனுமதி கோரிய மனு மீது ஜூன் 12 க்குள் போலீசார் முடிவெடுக்க வேண்டும். மாநாட்டிற்கான முன்னேற்பாடுகளை தொடரலாம். பூஜைகள் நடத்தக்கூடாது. விசாரணை ஜூன் 13 க்கு ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டார்.
மேலும்
-
தி.மலை கோவில் பிரகாரத்தில் பிரியாணி சாப்பிட்ட இருவர்
-
10 இடங்களில் வெயில் சதம்
-
இந்தியா உட்பட 14 நாடுகளுக்கான வேலை விசாவை நிறுத்தியது சவுதி
-
தலை நிமிர முடியாத அளவிற்கு தி.மு.க.,தோல்வியடையணும்: கவுதமி நடிகை கவுதமி பேட்டி
-
வைகாசி விசாகம்: திருச்செந்துாரில் லட்சக்கணக்கானோர் தரிசனம்
-
கார், வேன் மோதிய விபத்தில் புது மாப்பிள்ளை, சிறுமி பலி