'அவுட் ஆப் கன்ட்ரோல்' ஆக இருக்கும் 'சார்'களை எப்போது கன்ட்ரோல் செய்வீர்கள்?



'அவுட் ஆப் கன்ட்ரோல்' ஆக இருக்கும்'சார்'களை எப்போது கன்ட்ரோல் செய்வீர்கள்?

அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியின் அறிக்கை:



சென்னை தாம்பரம் அரசு சேவை இல்லத்தில், எட்டாம் வகுப்பு மாணவி ஒருவர் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, விடுதி காவலாளி கைது செய்யப்பட்டுஉள்ளதாக செய்திகள் வருகின்றன.


அரசு சேவை இல்லத்திலேயே, எட்டாம் வகுப்பு மாணவிக்கு பாதுகாப்பு இல்லை என்பது, இந்த தி.மு.க., அரசு முற்றிலும் செயலிழந்து நிற்பதையே உணர்த்துகிறது. பொம்மை முதல்வர் ஸ்டாலின், இதற்கு வெட்கி தலைகுனிய வேண்டும்.



அரசு சேவை இல்லத்தில் உள்ள சிறுமியரை காக்க வேண்டிய காவலாளியே, இப்படி ஒரு கொடூர செயலில் ஈடுபட்டிருப்பது, குற்றம் செய்பவர்களுக்கு இந்த ஆட்சி எடுக்கும் நடவடிக்கைகள் மீது, துளிகூட பயம் இல்லை என்ற குற்றச்சாட்டை மெய்ப்பிக்கும் வகையில் உள்ளது.


இந்த காவலாளியால், மற்ற சிறுமியர் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனரா என்பதை, காவல் துறையினர் தீர விசாரிக்க வேண்டும்.


தமிழகம் டில்லிக்கு, 'அவுட் ஆப் கன்ட்ரோல்' ஆக இருப்பதாக, யாரோ எழுதிக்கொடுத்த 'டயலாக்' பேசும் பொம்மை முதல்வர் ஸ்டாலின், தி.மு.க., ஆட்சியில், அவுட் ஆப் கன்ட்ரோலாக இருக்கும் பாலியல் 'சார்'களை எப்போது கன்ட்ரோல் செய்யப்போகிறார்?


காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவிக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். கைது செய்யப்பட்டுள்ள காவலாளி மீது, கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement