குழந்தைக்கு தொந்தரவு முதியவருக்கு வலைவீச்சு
பள்ளிப்பாளையம் : நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையத்தை சேர்ந்த தறித்தொழிலாளியின், 4 வயது மகள், அங்குள்ள அங்கன்வாடி மையத்தில் படித்து வருகிறார். கடந்த, 6ல் குழந்தை தொடர்ந்து அழுதபடி இருந்துள்ளது. குழந்தையிடம் பெற்றோர் விசாரித்தபோது, அங்கன்வாடி மையத்தில் ஒருவர் பாலியல் தொந்தரவு செய்தது தெரிந்து அதிர்ச்சியடைந்தனர்.
பெற்றோர் புகாரில், போலீசார் விசாரித்ததில், பள்ளிப்பாளையத்தை சேர்ந்த தேவராஜ், 60, அங்கன்வாடி மைய உதவியாளர், வெப்படையை சேர்ந்த சரஸ்வதி, 49, ஆகியோருக்கு பழக்கம் இருந்துள்ளது. அவரை பார்க்க, அங்கன்வாடி மையத்துக்கு தேவராஜ் அடிக்கடி வந்த போது, குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது. இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், சரஸ்வதியை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள தேவராஜை தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தொடரும் வன்முறை சம்பவங்கள்; அமெரிக்க கடற்படையினர் கட்டுப்பாட்டில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம்!
-
இன்னும் 7,000 கோடி ரூபாய் பாக்கி; விஜய் மல்லையா புகாருக்கு வங்கிகள் மறுப்பு
-
நோய் கிருமி கடத்தல்: வுஹான் ஆய்வகத்தின் சீன விஞ்ஞானி அமெரிக்காவில் கைது
-
சிவகாசி அரசு பள்ளியில் மகளை சேர்த்த நீதிபதி!
-
உக்ரைனின் ட்ரோன் தாக்குதலால் மாஸ்கோவில் விமான சேவை கடும் பாதிப்பு; பதிலடி கொடுக்க ரஷ்யா தீவிரம்
-
பள்ளி எதிரில் குளம் பெற்றோர் அச்சம்
Advertisement
Advertisement