விம்பிள்டன் டென்னிஸ்: பரிசு எவ்வளவு

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் பரிசுத் தொகை அதிகரிக்கப்பட்டது.
லண்டனில், வரும் ஜூன் 30 முதல் ஜூலை 13 வரை விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் நடக்கிறது. மொத்த பரிசுத் தொகை ரூ. 622 கோடி. இது, கடந்த ஆண்டை விட 7 சதவீதம் அதிகம். ஒற்றையரில் கோப்பை வெல்லும் வீரர், வீராங்கனைக்கு தலா ரூ. 35 கோடி பரிசு வழங்கப்பட உள்ளது. இது, கடந்த ஆண்டை விட 11.1 சதவீதம் அதிகம்.
முதல் சுற்றோடு திரும்பும் வீரர், வீராங்கனைகளுக்கு தலா ரூ. 76 லட்சம் பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது, கடந்த ஆண்டை விட 10 சதவீதம் அதிகம். இதேபோல இரட்டையர், கலப்பு இரட்டையர், வீல்சேர், ஜாம்பவான்களுக்கு இடையிலான போட்டியில் பங்கேற்கும் நட்சத்திரங்களுக்கான பரிசுத் தொகையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
போட்டியில் பந்து 'பிட்ச்' ஆகும் இடத்தை எலக்ட்ரானிக் முறையில் கண்காணிக்க உள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
காலாண்டு, அரையாண்டு தேர்வு தேதிகள் அறிவிப்பு: நாட்காட்டியை வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை
-
போயிங் விமானங்களில் பாதுகாப்பு ஆய்வு: ஏர் இந்தியாவுக்கு டிஜிசிஏ உத்தரவு
-
விமான விபத்து குறித்த யூகங்களை நம்ப வேண்டாம்: டாடா நிறுவன தலைவர் வேண்டுகோள்
-
இஸ்ரேலுக்கு கடுமையான தண்டனை: ஈரான் தலைவர், அதிபர் எச்சரிக்கை
-
ஈரான் மீது தாக்குதல்: மோடி உள்ளிட்ட உலக தலைவர்களுடன் ஆலோசித்த இஸ்ரேல் பிரதமர்
-
கரும்புத் தோட்டம் கான்கிரீட் சாலையில் நடந்த போலி விவசாயி நான் அல்ல; முதல்வரை சாடிய இ.பி.எஸ்.
Advertisement
Advertisement