ஜூன் 15ம் தேதி கல்லணையை திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

4

தஞ்சை: டெல்டா மாவட்ட பாசன வசதிக்காக கல்லணையில் இருந்து முதல்வர் ஸ்டாலின் நீரை திறந்து வைக்கிறார்.


தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சையில் ஆண்டுதோறும், குறுவை, சம்பா மற்றும் தாளடி என மூன்று போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. நேற்று மேட்டூர் அணையில் முதல்வர் ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்தார். இந்த தண்ணீர், கரூர், திருச்சி வழியாக கல்லணையை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


வரும் 15ம் தேதி முதல் 2 நாட்கள் தஞ்சையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதல்வர் ஸ்டாலின், கல்லணையை திறந்து வைக்க உள்ளார். இதன்மூலம், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதறை அரியலூர், கடலூர் மற்றும் புதுக்கோட்டையில் உள்ள விளைநிலங்கள் பயனடையும்.

Advertisement