புதிய கேப்டன் மெஹிதி ஹசன்

தாகா: வங்கதேச ஒருநாள் போட்டி அணிக்கு புதிய கேப்டனாக மெஹிதி ஹசன் மிராஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை செல்லவுள்ள வங்கதேச அணி, 2 டெஸ்ட், 3 ஒருநாள், 3 'டி-20' போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. ஒருநாள், டெஸ்ட் அணிகளுக்கு நஜ்முல் ஹொசைன் ஷான்டோ, 'டி-20' அணிக்கு லிட்டன் தாஸ் கேப்டனாக உள்ளனர். ஒருநாள் போட்டிக்கு புதிய கேப்டனை நியமிக்க வங்கதேச கிரிக்கெட் போர்டு முடிவு செய்தது. இப்பதவிக்கு 'ஆல்-ரவுண்டர்' மெஹிதி ஹசன் மிராசை 27, அறிவித்தது. இவர், ஒரு ஆண்டுக்கு மட்டும் கேப்டனாக செயல்படுவார். 105 போட்டியில் (1617 ரன், 110 விக்கெட்) பங்கேற்றுள்ளார்.
மெஹிதி ஹசன் கூறுகையில், ''ஒவ்வொரு வீரருக்கும், தங்களது அணியை வழிநடத்த வேண்டும் என்ற கனவு இருக்கும். ஒருநாள் போட்டிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டிருப்பதை, கவுரவமாக கருதுகிறேன்,'' என்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
விமான விபத்து குறித்த யூகங்களை நம்ப வேண்டாம்: டாடா நிறுவன தலைவர் வேண்டுகோள்
-
இஸ்ரேலுக்கு கடுமையான தண்டனை: ஈரான் தலைவர், அதிபர் எச்சரிக்கை
-
ஈரான் மீது தாக்குதல்: மோடி உள்ளிட்ட உலக தலைவர்களுடன் ஆலோசித்த இஸ்ரேல் பிரதமர்
-
கரும்புத் தோட்டம் கான்கிரீட் சாலையில் நடந்த போலி விவசாயி நான் அல்ல; முதல்வரை சாடிய இ.பி.எஸ்.
-
ஏர் இந்தியா விமான விபத்துக்கு காரணம் என்னவாக இருக்கும்; நிபுணர் கூறுவது இதுதான்!
-
நீலகிரிக்கு ரெட் அலர்ட் எதிரொலி: பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
Advertisement
Advertisement