6 மாவட்டங்களில் இன்று கனமழை: நீலகிரிக்கு நாளை 'ரெட் அலெர்ட்'

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கை:
நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரில் அதிகபட்சமாக, 10 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.
வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிஷா பகுதிகளின் மேல், ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
மேலடுக்கு சுழற்சி
தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளின் மேலும், ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதனால், தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில், இன்று, இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யலாம்.
கோவை, நீலகிரி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், இன்று கன அல்லது மிக கனமழை, திருநெல்வேலி, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புஉள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் நாளை, நாளை மறுநாள், அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், அப்பகுதிக்கு, 'ரெட் அெலர்ட்' விடுக்கப்பட்டுஉள்ளது.
மேகமூட்டம்
கோவை, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், நாளை கனமழை முதல் மிக கனமழை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும், ஒரு சில இடங்களில், இடி மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புஉள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி
-
பெருமாள் கோவிலில் தெப்பல் உற்சவம்
-
விநாயகா மிஷன் சட்ட பள்ளியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து
-
பைக்கில் மான் தோல் கடத்திய சாமியார் உட்பட இருவர் கைது
-
செங்கையில் மகளை கர்ப்பமாக்கிய கொடூர தந்தைக்கு ஆயுள் தண்டனை
-
ஏரி கரையை உடைத்து தனியாருக்கு பாலம் அமைப்பதை தடுக்க மனு