வேன் மோதி மாடு வியாபாரி பலி
திருச்செங்கோடு: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்தவர் முத்துசாமி, 75. மாடு வியாபாரி. இவர், சேலம் மாவட்டம் ஓமலுார் அருகே பெருமாள் கோவில் பகுதியில் நேற்று கூடிய மாட்டுச்சந்தைக்கு, நேற்று முன்தினமே வந்தார்.
இரவு, 10:00 மணிக்கு, ஓமலுார் - தாரமங்கலம் நெடுஞ்சாலையை கடந்து, சந்தை பகுதிக்கு செல்ல முயன்றபோது, ஓமலுாரில் இருந்து தாரமங்கலம் நோக்கி வந்த சரக்கு வேன் மோதியது. இதில் முத்துசாமி, சம்பவ இடத்தில் பலியானார். தொளசம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement