நீலகிரிக்கு 'ரெட் அலர்ட்' கண்காணிப்பு பணிகள் தீவிரம்

1

ஊட்டி : நீலகிரிக்கு 'ரெட் அலர்ட்' அறிவிக்கப்பட்டதை அடுத்து மாவட்ட நிர்வாகம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது.


நீலகிரியில், 14 ம் தேதி மற்றும் 15 ம் ' ரெட் அலர்ட்' அறிவிப்பு விடுக்கப்பட்டது. பேரிடர் மீட்பு குழுவினர், 21பேர் எஸ்.ஐ., பிரபாகரன் தலைமையில் பந்தலூரில் தயார் நிலையில் உள்ளனர்.


மழை வெள்ளப்பெருக்கு ஏற்படும் பொன்னானி, வெள்ளேரி, வட்டக் கொல்லி ஆகிய பகுதிகளில் வருவாய் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.


அங்கு வசிக்கும் பழங்குடியின மக்களை பாதுகாப்புடன் இருக்க வேண்டும். என, அறிவுறுத்தினர்.


கூடலூரில், அதிக வெள்ள பாதிப்பு ஏற்பட்படும் பாண்டியார் - புன்னம்புழா ஆற்றுப் பகுதியில், சிறப்பு சப்- கலெக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.



மீட்பு பணிகள் மேற்கொள்ள அனைத்து துறையினரும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.என, தெரிவித்தார். 20 பேர் கொண்ட மாநில பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். ஊட்டி, குந்தா பகுதிகளில் கண்காணிப்பு அலுவலர்கள் சதீஷ்குமார், கவுசிக் ஆகியோர் நிவாரண முகாம்களை ஆய்வு செய்தனர்.



நீலகிரிக்கு ' ரெட் அலர்ட் ' ஒருப்புறம் விடுக்கப்பட்டாலும், மறுப்புறம் சுற்றுலா பயணிகளின் வருகையும் கணிசமாக காணப்பட்டது.

Advertisement