தனிஷ்க் ஜூவல்லரியில் புதிய திட்டம் துவக்கம்

தேனி: தேனி தனிஷ்க் ஜூவல்லரியில், 'தங்க பரிமாற்றம்' எனும், புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இத்திட்டம் ஜூன் 30வரை செயல்படுத்தப்படும். வாடிக்கையாளர்கள் தனிஷ்க், பிற நிறுவனங்களில் வாங்கிய தங்க, வைர நகைகளை காரட் மீட்டரில் வெளிப்படையாக மதிப்பீடு செய்து கூடுதலாக ஒரு காரட்டிற்கான தொகையை தாங்கள் வாங்கும் புதிய தங்க நகைகள் மீது வரவு வைத்து பெற்றுக் கொள்ளலாம்.

இத்திட்ட துவக்க விழாவில் பாலசங்கா குழும இயக்குனர் செந்தில்நாராயணன், தனிஷ்க் மேலாளர் பாலாஜி, ஊழியர்கள் பங்கேற்றனர். இந்த எக்ஸ்சேஞ்ச் திருவிழாவை முன்னிட்டு ஏராளமான டிசைன்களில் நகைகள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன.

வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி பயன் பெறலாம் என மேலாளர் பாலாஜி தெரிவித்தார்.

Advertisement