சேதமடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ரெட்டிபேட்டை தெருவில், சேதமடைந்த சாலையில் மழைநீர் தேங்குவதால், வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
காஞ்சிபுரம் ரெட்டிபேட்டை தெரு வழியாக ஆனந்தாபேட்டை, பாக்ராபேட்டை மின்நகர், திருக்காலிமேடு, ராஜாஜி மார்க்கெட் உள்ளிட்ட பகுதிக்கு செல்வோர் சென்று வருகின்றனர். வாகன போக்குவரத்தும், பொதுமக்கள் நடமாட்டமும் மிகுந்த இச்சாலையில், ஜல்லி கற்கள் பெயர்ந்து, சாலை சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதனால், லேசான மழைக்கே சாலை சேதமடைந்த பகுதியில், மழைநீர் தேங்குகின்றன. மேலும், மழைநீர் தேங்கியுள்ள பகுதியில் பள்ளம் இருப்பது தெரியாமல் செல்லும் இருச்கர வாகன ஓட்வடிகள் நிலைதடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.
எனவே, ரெட்டிபேட்டை தெருவில், சேதமடைந்த சாலையை, ‛பேட்ச் ஒர்க்' பணியாக சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும்
-
நிரம்பியது பில்லூர் அணை: பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு
-
நடுவானில் திடீர் தொழில்நுட்பக் கோளாறு; லண்டன்- சென்னை விமான சேவை பாதிப்பு
-
10 ஆண்டுகளில் தொழில்துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள்; சைப்ரஸில் தொழிலதிபர்கள் மத்தியில் பிரதமர் பேச்சு
-
அமெரிக்க அதிபர் டிரம்பை கொல்ல ஈரான் விரும்புகிறது: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
-
பெரியார் நகர் சாலை சேதம்
-
அங்கன்வாடி கட்டடம் சேதம் பராமரிக்க வேண்டுகோள்