ஈரான் டிவி ஸ்டேஷன் மீது இஸ்ரேல் தாக்குதல்; நேரலையில் தப்பி ஓடிய செய்தி வாசிப்பாளர்

டெஹ்ரான்:ஈரான் டிவி ஸ்டேஷன் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்திய போது, நேரலையில் செய்தி வாசித்துக் கொண்டிருந்த பெண் செய்தி வாசிப்பாளர், தப்பி ஓடினார்.
ஈரான் அணுகுண்டு தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருப்பதாக கூறி இஸ்ரேல் அந்நாட்டின் மீது போர் தொடுத்துள்ளது.
பதிலுக்கு ஈரானும் தாக்குதல் நடத்தி வருகிறது.இரு நாடுகளிலும் உயிரிழந்தோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஈரானின் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல் ராணுவம், இன்று அந்நாட்டு அரசு டிவி ஸ்டேஷன் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
தாக்குதல் நடந்த போது டிவி ஸ்டேஷனில் பெண் செய்தி வாசிப்பாளர் சாகர் இமாமி என்பவர் நேரலையில் செய்தி வாசித்துக் கொண்டிருந்தார்.
ஏவுகணை தாக்குதலில் டிவி ஸ்டேஷன் கடுமையாக சேதமுற்றது. ஸ்டுடியோவில் நேரலையில் செய்தி வாசித்துக் கொண்டிருந்த செய்தி வாசிப்பாளர், கட்டடம் இடிந்து சிதறுவதை கண்டதும் எழுந்து ஓடினார்.
இந்த காட்சி நேரலையில் ஒளிபரப்பானது.தாக்குதல் நடந்த போதும் ஈரான் டிவிகளில் தொடர்ந்து செய்திகள் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. ஈரான் மீதான தாக்குதலை இஸ்ரேல் தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகிறது.
வாசகர் கருத்து (1)
SUBBU,MADURAI - ,
16 ஜூன்,2025 - 21:40 Report Abuse

0
0
Reply
மேலும்
-
திறனாய்வு தேர்வில் 44 பேர் தேர்ச்சி
-
ரூ.1,500 கோடி மோசடி விவகாரத்தில் 154 பேரிடம் அசல் ஆவணம் பெற்ற சி.பி.ஐ.,
-
நாட்டின் பாதுகாப்பு பிரச்னைகள் அரசியலுக்கு அப்பாற்பட்டவை: துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் பேச்சு
-
போதையில் தொழிலாளி கீழே விழுந்து பலி
-
கிணற்றில் இருந்து ஆண் சடலம் மீட்பு
-
தண்டவாளத்தில் மரம் விழுந்து தீ; குமரி - புனலுார் ரயில் தப்பியது
Advertisement
Advertisement