ஈரான் டிவி ஸ்டேஷன் மீது இஸ்ரேல் தாக்குதல்; நேரலையில் தப்பி ஓடிய செய்தி வாசிப்பாளர்

2


டெஹ்ரான்:ஈரான் டிவி ஸ்டேஷன் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்திய போது, நேரலையில் செய்தி வாசித்துக் கொண்டிருந்த பெண் செய்தி வாசிப்பாளர், தப்பி ஓடினார்.

ஈரான் அணுகுண்டு தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருப்பதாக கூறி இஸ்ரேல் அந்நாட்டின் மீது போர் தொடுத்துள்ளது.

பதிலுக்கு ஈரானும் தாக்குதல் நடத்தி வருகிறது.இரு நாடுகளிலும் உயிரிழந்தோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஈரானின் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல் ராணுவம், இன்று அந்நாட்டு அரசு டிவி ஸ்டேஷன் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
தாக்குதல் நடந்த போது டிவி ஸ்டேஷனில் பெண் செய்தி வாசிப்பாளர் சாகர் இமாமி என்பவர் நேரலையில் செய்தி வாசித்துக் கொண்டிருந்தார்.
ஏவுகணை தாக்குதலில் டிவி ஸ்டேஷன் கடுமையாக சேதமுற்றது. ஸ்டுடியோவில் நேரலையில் செய்தி வாசித்துக் கொண்டிருந்த செய்தி வாசிப்பாளர், கட்டடம் இடிந்து சிதறுவதை கண்டதும் எழுந்து ஓடினார்.


இந்த காட்சி நேரலையில் ஒளிபரப்பானது.தாக்குதல் நடந்த போதும் ஈரான் டிவிகளில் தொடர்ந்து செய்திகள் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. ஈரான் மீதான தாக்குதலை இஸ்ரேல் தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகிறது.

Advertisement