வடிகால்வாயில் கொட்டப்பட்டுள்ள கட்டட கழிவுகள் அகற்றப்படுமா?

உத்திரமேரூர் பேரூராட்சி, ஆனைப்பள்ளம் பகுதியில், 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் மழைநீர் வெளியேற வடிகால்வாய் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது.

தற்போது, காஞ்சிபுரம் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள வடிகால்வாயில், கட்டட கழிவுகள் கொட்டப்பட்டு உள்ளன. இதனால், தண்ணீரானது தடையின்றி செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.

எனவே, வடிகால்வாயில் கொட்டப்பட்டுள்ள கட்டட கழிவுகளை அகற்ற, பேரூராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-- ஆர்.ராமசுப்பிரமணியன்,

ஆனைப்பள்ளம்.

Advertisement