25 கிலோ கஞ்சாவுடன் நான்கு பேர் சிக்கினர்

வேளச்சேரி, வேளச்சேரி மேம்பாலம் ரயில் நிலையம் அருகில், கஞ்சா கடத்தி வந்து, சில்லரை வியாபாரிகளுக்கு விற்கப்படுதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்படி, அடையாறு மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் சோதனை நடத்தி, ஒரு ஆண் மற்றும் மூன்று பெண்களை மடக்கி பிடித்தனர்.
விசாரணையில், ஹைதராபாத்தை சேர்ந்த கீதா, 60, சரிதா, 40, சகாயமேரி, 35, கொல்கத்தாவை சேர்ந்த சேர்ந்த கண்ணா தாஸ், 39, என தெரிந்தது.
இவர்கள், வட மாநிலங்களில் இருந்து கஞ்சா கடத்தி வந்து, பல்லாவரம், திருவான்மியூர், வேளச்சேரி, துரைப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில், சில்லரை வியாபாரிகளுக்கு விற்பனை செய்வது தெரிய வந்தது.
நான்கு பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 25 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
காரைக்கால் மாங்கனி திருவிழா பந்தல் கால் முகூர்த்தம் நடந்தது
-
பிரதமர் குறித்து அவதுாறு போலீசில் பா.ஜ., புகார்
-
பிரச்னையும் தீர்வும் பகுதிக்கு ; வடமதுரையில் ஆபத்தான நால்ரோடு சந்திப்பு
-
அமலோற்பவம் பள்ளியில் தொழில் வேலைவாய்ப்பு வழிகாட்டி நிகழ்ச்சி
-
பூஜை நடத்தி மீனவர்கள் கடலுக்கு சென்றனர்
-
வராகி அம்மனுக்கு பஞ்சமி சிறப்பு பூஜை
Advertisement
Advertisement