அமலோற்பவம் பள்ளியில் தொழில் வேலைவாய்ப்பு வழிகாட்டி நிகழ்ச்சி

புதுச்சேரி : புதுச்சேரி அமலோற்பவம் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு, தொழில் மற்றும் வேலைவாய்ப்புக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது.

நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர் ஆண்டனியஸ் பிரிட்டோ வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக ஜே.பி.காந்தி கலந்து பேசுகையில், வளரும் மாணவ பருவத்தினர் தன்னம்பிக்கையும் தைரியமும், தொழில் வாய்ப்புகளைக் கண்டறியும் நுணுக்கங்களையும், எதிர்காலத்தில் சரியான வழியைத் தேர்ந்தெடுப்பது குறித்தும், வளர்ந்து வரும் தொழில் விருப்பங்கள் மற்றும் தேர்வுக்கான தயாரிப்பு குறித்து மாணவர்களுக்கு விளக்கினார்.

பயிற்றுநர் மற்றும் தொழில் முனைவோரான ஸ்ரீநிவாஸ் ராஜேந்திரன் பேசுகையில், தேசிய மின்னணு நிதி பரிமாற்ற தேர்வான என்.ஐ.எப்.டி., பொது சட்ட நுழைவுத்தேர்வான சிலாட், பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வான கியூட் குறித்தும், மாணவர்கள் தங்களது எதிர்கால திட்டங்கள் மற்றும் கல்வி வேலை வாய்ப்புகள் குறித்து விளக்கினார். தொடர்ந்து மாணவர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கமளித்தார்.

அதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர்களுக்கு பள்ளி சார்பில் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

Advertisement