சிதம்பரம் பல்கலையில் கால அவகாசம் நீட்டிப்பு

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைகழக பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பிக்க வரும் 30ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டடுள்ளது.

இதுகுறித்து பல்கலைக் கழக செய்திக்குறிப்பு:

கடலுார் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 2025-26ம் கல்வி ஆண்டிற்கான டிப்ளமோ பார்மசி, இளங்கலை பார்மசி, பார்ம்-டி, ஆகிய பாடப்பிரிவுகள் நீங்கலாக, இங்கு நடத்தப்படும் மற்ற அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் ஆன் லைன் சேர்க்கைக்கான பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க, கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வரும் 30ம் தேதி, மாலை 5:00 மணி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு www.annamalaiuniversity.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Advertisement