ரூ.6.48 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கல்
கரூர், கரூர் கலெக்டர் அலுவலகத்தில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்தார். கரூர் எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 1.18 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 100 பயனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர்களையும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பாக கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், 5.10 கோடி மதிப்பில், 145 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணை.
கால்நடை பராமரிப்பு துறை சார்பில், ஆடுகளை நாய்கள் கடித்து இறந்ததன் விளைவாக தமிழ்நாடு அரசின் சார்பில், 13 விவசாயிகளுக்கு, 3.12 லட்சம் ரூபாய் மதிப்பில் இழப்பீட்டு தொகை, மகளிர் திட்டம் சார்பாக வட்டார வணிக வள மையம் மற்றும் சமுதாய முதலீட்டு நிதியாக, 38 பயனாளிகளுக்கு 16.80 லட்சம் ரூபாய் மதிப்பில் கடனுதவி என மொத்தம், 296 பயனாளிகளுக்கு, 6.48 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
எம்.எல்.ஏ.,க்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி, மாநகராட்சி மேயர் கவிதா, டி.ஆர்.ஓ., கண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீலேகா உள்பட பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
தமிழகத்தில் அதிகபட்ச மழைப்பொழிவு எங்கே? இதோ முழு விபரம்!
-
நாங்கள் வெற்றிப் பாதையில் இருக்கிறோம்: சொல்கிறார் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
-
தங்கவயல் மகளிர் மன்றம் 40ம் ஆண்டு விழா
-
சாமுண்டீஸ்வரி தரிசன கட்டணம் உயர்வை எதிர்த்து போராட்டம்
-
அனுமதி மறுத்த போலீசார் முதல்வர் கார் முன் போராட்டம்
-
துமகூரின் பெயரை மாற்றக்கூடாது சித்தலிங்க சுவாமிகள் எதிர்ப்பு