வெள்ளகோவில் நகராட்சி பகுதியில் ரூ.4.கோடி மதிப்பில் சாலை பணி

காங்கேயம், வெள்ளகோவில் நகராட்சி பகுதியில், 4. கோடி ரூபாய் மதிப்பில், சாலை பணிகளை துவக்கி வைத்தும், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தில், 19.90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் நேற்று தொடங்கி வைத்தார்.
இதில் திருப்பூர் மாநராட்சி நான்காம் மண்டல தலைவர் இல.பத்மநாபன், வெள்ளகோவில் நகராட்சி தலைவர் கனியரசி, மாவட்ட துணை செயலாளர் முத்துக்குமார், வெள்ளகோவில் தி.மு.க., நகர செயலாளர் முருகானந்தன், ஒன்றிய செயலாளர் சந்திரசேகரன், வெள்ளகோவில் நகராட்சி கமிஷனர் மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது அமைச்சர் கூறியதாவது:

காங்கேயம் கூட்டு குடிநீர் திட்டத்தில், 63 கோடி ரூபாய் மதிப்பில் குழாய் மாற்றியமைக்கும் பணி நடந்து வருகிறது. அமாராவதி ஆற்றிலிருந்து புதுப்பைக்கு அமராவதி கூட்டு குடிநீர் திட்டம், 13 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒப்பந்தப்புள்ளி கேராப்பட்டு, விரைவில் பணி துவக்கப்பட உள்ளது. திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனை மருத்துவ கல்லுாரி மருத்துவமனையாக தரம் உயர்தப்பட்டதால், காங்கேயம் தாலுகா மருத்துவமனை தற்போது அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. இவ்வாறு கூறினார்.

Advertisement