கூடுதுறை கோவிலில் ரூ.41.65 லட்சம் காணிக்கை



பவானி, பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவிலில், ஆறு மாதங்களுக்கு முன் உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. இந்நிலையில் நேற்று கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள, 18 உண்டியல்களை திறந்து காணிக்கை எண்ணும் பணி நடந்தது.


இதில் தங்கம், 52 கிராம், வெள்ளி, 258 கிராம், சங்கமேஸ்வரர் கோவில் உண்டியல் காணிக்கை, 38.23 லட்சம் ரூபாய்; பழனியாண்டவர் கோவில் உண்டியலில், 16.60 லட்சம், கோசாலை காணிக்கை, 1.75 லட்சம், யானை பராமரிப்பு, 36,107 ரூபாய் என, 41.65 லட்சம் ரூபாய் காணிக்கையாக கிடைத்தது. கோவில் கணக்கு வைக்கப்பட்டுள்ள கனரா வங்கியில், பணம் மற்றும் நகை செலுத்தப்பட்டது.

Advertisement