பட்டா கத்தியில் கேக் வெட்டியவர் கைது

சத்தியமங்கலம், சத்தியமங்கலத்தை அடுத்த அரியப்பம்பாளையத்தில் சில நாட்களுக்கு முன், 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்று கூடி பிறந்தநாளை பட்டா கத்தியில் கேக் வெட்டி

கொண்டாடினர். இது தொடர்பான வீடியோ பரவியது. இதன் அடிப்படையில் சத்தி போலீசார் விசாரணை நடத்தினர். இது தொடர்பாக கொமராபாளையத்தை சேர்ந்த தனியார் நிதி நிறுவன ஊழியர் நிஷாந்த், 25, என்பவரை கைது செய்தனர்.

Advertisement