நீதிமன்ற புறக்கணிப்பு

ஈரோடு, ராணிபேட்டை மாவட்டம் சோளிங்கரில், வக்கீல் சக்ரவர்த்தி துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார்.

இதை கண்டித்தும், வக்கீல் பாதுகாப்பு சட்டம் நிறைவேற்ற வலியுறுத்தியும், ஈரோட்டில் பார் அசோசியேஷன் சார்பில், வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் நேற்று ஈடுபட்டனர். வக்கீல் குருசாமி தலைமையில், 330 பெண் வக்கீல் உள்ளிட்ட, 930 பேர் நீதிமன்ற பணிகளை புறக்கணித்தனர்.

Advertisement