சிறுவனுக்கு பாலியல் தொல்லை தொழிலாளிக்கு இரட்டை ஆயுள்
சேலம், சங்ககிரி அருகில், சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு, இரட்டை ஆயுள் தண்டனை விதித்து, சேலம் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சேலம் மாவட்டம், சங்ககிரி, வெள்ளாளபாளையம், காவேரிப்பட்டியை சேர்ந்தவர் லட்சுமணன், 47, கரும்பு வெட்டும் தொழிலாளி, இவர் கடந்த, 2023 ஜூலை, 10ல், ஆத்தங்கரை பகுதிக்கு வந்த, 4 வயது சிறுவனை, சாக்லேட் வாங்கி தருவதாக டூவீலரில் கடத்தி சென்று, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதில் படுகாயமடைந்த சிறுவனை, அதே பகுதியில் விட்டு விட்டு, ஓட்டம் பிடித்தார்.
அவ்வழியே சென்றவர்கள் சிறுவனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். பெற்றோர் அளித்த புகார் அடிப்படையில், தேவூர் போலீசார், லட்சுமணனை கைது செய்தனர். இவ்வழக்கு சேலம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று வழங்கப்பட்ட தீர்ப்பில், போக்சோ பிரிவின் கீழ், லட்சுமணனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை, கடத்தி சென்ற பிரிவுக்கு, 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து, தனித்தனியே அனுபவிக்க, நீதிபதி ஜெயந்தி தீர்ப்பளித்தார்
மேலும்
-
பெண்களுக்கு பிடித்தமான மத்துாரம்மா
-
சாலையில் துளையிட்டு கட்சி கொடி லாஸ்பேட்டையில் மக்கள் கடும் அவதி
-
காந்தாரா படக்குழுவுக்கு நோட்டீஸ் 3 நாட்களில் பதில் அளிக்க 'கெடு'
-
துணை ஜனாதிபதி வருகை இன்றும் போக்குவரத்து மாற்றம்
-
மூதாட்டியின் பணம் தீ விபத்தில் கருகியது
-
இந்திராகாந்தி மருத்துவ கல்லுாரியில் நவீன உயிர் வேதியியல் ஆய்வகம் திறப்பு