மூதாட்டியின் பணம் தீ விபத்தில் கருகியது

காரைக்கால் : காரைக்கால் விழிதியூர் பகுதியில் மின் கசிவு ஏற்பட்ட தீவிபத்தில் மூதாட்டியின் உதவித் தொகை பணம் ரூ.80 ஆயிரம் பணம் கருகியது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காரைக்கால் விழிதியூர் தெற்கு தெருவை சேர்ந்த இளவழகன் இவரது வீட்டில் கடந்த 14ம் தேதி மின்கசிவு ஏற்பட்டு சிலிண்டர் வெடித்து தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில் வீட்டில் உள்ள மின்சார பொருட்கள், முக்கிய ஆவணங்கள், நகை மற்றும் ரொக்கம் உள்ளிட்ட ரூ.7 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து சேதமானது.
மேலும் அவரது வீட்டின் பக்கத்தில் வசிக்கும் சீனிவாசன் மனைவி தனலட்சமி, 75; வீடும் தீப்பிடித்து எரிந்தது. உடன் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மேலும் தீ பரவாமல் தீயை அணைத்தனர். இதில் வீட்டில் இருந்து பொருட்களுடன் தனலட்சுமி வீட்டு பிரோவில் வைத்திருந்த மூன்று சவரன் நகை மற்றும் 500 ரூபாய் நோட்டு கள் கொண்ட ரூ.80ஆயிரம் ரூபாய் எரிந்தது.
தனலட்சுமி பெற்றுவரும் அரசு உதவித்தொகை மற்றும் 100நாள் வேலைக்கு சென்று சேமித்துவைத்திருந்த பணம் எரிந்து சேதமானதை பார்த்து மூதாட்டி கதறி அழுத சம்பவம் அங்கிருந்தர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. இச்சம்பவம் சமூக வளைதலங்களில் பரவி வைரலாகி வருகிறது.
மேலும்
-
ஜி7 மாநாட்டில் இருந்து பாதியில் புறப்பட்ட அதிபர் டிரம்ப்; பிரான்ஸ் அதிபர் மீது கடும் சாடல்!
-
மங்களூருவில் ஒரு மழைக்கே தாங்காத மேம்பாலம்; திறப்பு விழா கண்ட 15 நாட்களில் கசிவு
-
விஸ்வரூபம் எடுத்துள்ள சிறுவன் கடத்தல் வழக்கு; கைதான ஏ.டி.ஜி.பி., ஜெயராம் சஸ்பெண்ட்
-
இஸ்ரேலுக்கு தன்னை பாதுகாத்துக் கொள்ளும் உரிமை உண்டு; ஈரான் தான் பிரச்னைக்கு காரணம்; ஜி 7 மாநாட்டில் தீர்மானம்
-
இனியும் இப்படி ஒரு சம்பவம் நடக்கக்கூடாது என்று வேண்டிக்கொள்கிறேன்: விமான விபத்து குறித்து ரஜினி வேதனை பேட்டி
-
இரண்டரை நாட்களில் அணுகுண்டு தயார்; ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலுக்கு உடனடிக் காரணம் இதுதான்!