ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் ஜூலை 14ல் கும்பாபிஷேகம்
ஸ்ரீவில்லிபுத்துார் : தென்திருப்பதி என்று அழைக்கப்படும் ஸ்ரீவில்லிபுத்துார் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் ஜூலை 14ல் நடக்கிறது.
நேற்று காலை யாகசாலை பூஜைக்கான முகூர்த்த கால் நடும் வைபவம் செயல் அலுவலர் சர்க்கரை அம்மாள் தலைமையில் நடந்தது. கோயில் பட்டர்கள் ரகு,கிரி, அனிருத் பட்டர்கள் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து முகூர்த்த காலை நட்டனர். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வெங்கட்ராமராஜா தலைமையில் அறநிலைத்துறையினர், கோயில் பட்டர்கள் செய்திருந்தனர்.
ஜூலை 12 காலை முதல் யாகசாலை பூஜைகளுடன் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் துவங்குகிறது. ஜூலை 14 அதிகாலை 5:30 மணிக்கு மேல் 6:30 மணிக்குள் சீனிவாச பெருமாள் விமானம், பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை அறநிலையத் துறையினர் செய்து வருகின்றனர்.
மேலும்
-
விஸ்வரூபம் எடுத்துள்ள சிறுவன் கடத்தல் வழக்கு; கைதான ஏ.டி.ஜி.பி., ஜெயராம் சஸ்பெண்ட்
-
இஸ்ரேலுக்கு தன்னை பாதுகாத்துக் கொள்ளும் உரிமை உண்டு; ஈரான் தான் பிரச்னைக்கு காரணம்; ஜி 7 மாநாட்டில் தீர்மானம்
-
இனியும் இப்படி ஒரு சம்பவம் நடக்கக்கூடாது என்று வேண்டிக்கொள்கிறேன்: விமான விபத்து குறித்து ரஜினி வேதனை பேட்டி
-
இரண்டரை நாட்களில் அணுகுண்டு தயார்; ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலுக்கு உடனடிக் காரணம் இதுதான்!
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 சரிவு; ஒரு சவரன் ரூ.73,600!
-
ஒரே நேரத்தில் 2 காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது: இந்திய வானிலை மையம் தகவல்