உத்தமபாளையத்தில் லோக் அதாலத்: ரூ.2.73 கோடிக்கு தீர்வு

உத்தமபாளையம் : உத்தமபாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடந்தது. இதில் ரூ.2.73 கோடிக்கு தீர்வு வழங்கப்பட்டது. இந்நிகழ்வுக்கு வட்ட சட்டப் பணிகள் குழு தலைவர் நீதிபதி சிவாஜி செல்லையா தலைமை வகித்தார்.

மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ராஜசேகர், உத்தமபாளையம் நடுவர் நீதிமன்ற நீதிபதி காமராசு, விரைவு நீதிமன்ற நீதிபதி அமலநாதன் கமலகண்ணன் முன்னிலை வகித்தனர்.

மோட்டார் வாகன விபத்து வழக்குகளில் நஷ்ட ஈடாக ரூ.75 லட்சத்து 4 ஆயிரம், ஆறு வழக்குகளில் ரூ.79 லட்சத்து 4 ஆயிரத்து 27, காசோலை மோசடி, புரோ நோட் மோசடி, பிணை கைதிகள் தங்களின் குற்றங்களை ஒப்புக் கொண்டு செலுத்திய கட்டிய அபராத தொகை ரூ.14 லட்சத்து 18 ஆயிரத்து 500. கணவரிடம் இருந்து ஜீவனாம்சம் ரூ.35 லட்சம், வங்கி வாராக்கடன் ரூ.6 லட்சத்து 80 ஆயிரம், என, மொத்தம் தீர்வான தொகையாக ரூ.2.73 கோடிக்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. இதற்கான உத்தரவுகளை சமரச தீர்வுக்கான விண்ணப்பதாரர்களிடம் நீதிபதிகள் வழங்கினர்.

இதில் பார் அசோசியேசன் தலைவர் கணேசன், செயலாளர் ஈஸ்வரன், உறுப்பினர்கள் வக்கீல்கள் சையது அபுதாகீர், மூசா ஷமீம் ஆகியோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை வட்ட சட்டப் பணிகள் குழு சசிதர் செய்திருந்தார்.

Advertisement