விதை நெல் விற்பனை 'ஜரூர்': கண்காணிப்பு அவசியம்
கம்பம் : முதல் போக சாகுபடிக்கான விதைநெல் கொள்முதலில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். விதை சான்றளிப்பு துறையினர் கண்காணிப்பு செய்வது அவசியமாகும்.
கம்பம் பள்ளத்தாக்கில் முதல் போக நெல் சாகுபடிக்கென முல்லைப்பெரியாறு அணையிலிருந்து ஜூன் முதல் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.
வாய்க்காலை பராமரிக்கின்றோம் என கூறி நீர்வளத்துறையினர் உத்த முத்து வாய்க்காலில் தண்ணீர் விடவில்லை.
இதில் உள்ள 45 மடைகளுக்கு 18 மடைகள் வரை தான் தண்ணீர் திறந்து 15 நாட்கள் கழித்து நேற்று தண்ணீர் தந்துள்ளனர்.
இந்நிலையில் நாற்றாங்கால் வளர்க்க விவசாயிகள் விதை நெல் கொள்முதலில் ஆர்வம் காட்டி வருகின்றனர். வேளாண் துறை மற்றும் தனியார் கடைகளிலும் விதைநெல் கொள்முதல் செய்கின்றனர். பெரும்பாலும் ஆர். என். ஆர். என்ற ரகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகள் கொள்முதல் செய்யும் இந்த வேளையில், விதை சான்றளிப்பு துறை கண்காணிப்பு செய்ய வேண்டும். முளைப்பு திறன், சான்றளிக்கப்பட்டுள்ளதா போன்ற விபரங்களை ஆய்வுக்குட்படுத்த வேண்டும்.
பெயரளவிற்கு என்றில்லாமல் கூடுதல் கவனத்துடன் விதை சான்றளிப்பு துறை களம் இறங்க வேண்டும். நடவு செய்து பின் பயிர் வளர்ச்சி இல்லை என்று விவசாயிகள் கூறாமல் இருக்க நடவடிக்கை அவசியமாகும்.
மேலும்
-
விஸ்வரூபம் எடுத்துள்ள சிறுவன் கடத்தல் வழக்கு; கைதான ஏ.டி.ஜி.பி., ஜெயராம் சஸ்பெண்ட்
-
இஸ்ரேலுக்கு தன்னை பாதுகாத்துக் கொள்ளும் உரிமை உண்டு; ஈரான் தான் பிரச்னைக்கு காரணம்; ஜி 7 மாநாட்டில் தீர்மானம்
-
இனியும் இப்படி ஒரு சம்பவம் நடக்கக்கூடாது என்று வேண்டிக்கொள்கிறேன்: விமான விபத்து குறித்து ரஜினி வேதனை பேட்டி
-
இரண்டரை நாட்களில் அணுகுண்டு தயார்; ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலுக்கு உடனடிக் காரணம் இதுதான்!
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 சரிவு; ஒரு சவரன் ரூ.73,600!
-
ஒரே நேரத்தில் 2 காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது: இந்திய வானிலை மையம் தகவல்