சிவகங்கையில் 11 மினி பஸ்கள்

சிவகங்கை : சிவகங்கையில் 11 வழித்தடத்தில் மினி பஸ் திட்டத்தை அமைச்சர் பெரியகருப்பன் துவக்கி வைத்தார்.
விழாவிற்கு கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்தார். வட்டார போக்குவரத்து அலுவலர் கருப்பணன் வரவேற்றார். எம்.எல்.ஏ., தமிழரசி, திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) கேசவதாசன், நகராட்சி தலைவர் துரைஆனந்த், காரைக்குடி போக்குவரத்து ஆய்வாளர் அனிதா, நகராட்சி கவுன்சிலர்கள் ஜெயகாந்தன், அயூப்கான் பங்கேற்றனர்.
கலெக்டர் பேசியதாவது:
மாவட்ட அளவில் 40 வழித்தடங்களில் 50 மினி பஸ்களை இயக்கி கொள்ள அனுமதி வழங்கப்பட உள்ளது. முதற்கட்டமாக 11 மினி பஸ்கள் இயக்க அனுமதித்துள்ளோம். படிப்படியாக அனைத்து மினிபஸ்களுக்கும் அனுமதி வழங்கப்படும்.
இந்த மினி பஸ்கள் 26 கி.மீ., துாரம் வரை செல்ல அனுமதிக்கப்படும். குறைந்த பட்சம் ரூ.4 முதல் அதிகபட்ச கட்டணமாக ரூ.11 வரை மட்டுமே வசூலிக்க வேண்டும். இதன் மூலம் கிராமப்புற மக்களின் பஸ் போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என்றார்.
வட்டார போக்குவரத்து அலுவலக கண்காணிப்பாளர் தீரேந்திரபூபதி நன்றி கூறினார்.
மேலும்
-
விஸ்வரூபம் எடுத்துள்ள சிறுவன் கடத்தல் வழக்கு; கைதான ஏ.டி.ஜி.பி., ஜெயராம் சஸ்பெண்ட்
-
இஸ்ரேலுக்கு தன்னை பாதுகாத்துக் கொள்ளும் உரிமை உண்டு; ஈரான் தான் பிரச்னைக்கு காரணம்; ஜி 7 மாநாட்டில் தீர்மானம்
-
இனியும் இப்படி ஒரு சம்பவம் நடக்கக்கூடாது என்று வேண்டிக்கொள்கிறேன்: விமான விபத்து குறித்து ரஜினி வேதனை பேட்டி
-
இரண்டரை நாட்களில் அணுகுண்டு தயார்; ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலுக்கு உடனடிக் காரணம் இதுதான்!
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 சரிவு; ஒரு சவரன் ரூ.73,600!
-
ஒரே நேரத்தில் 2 காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது: இந்திய வானிலை மையம் தகவல்