தபால் நிலையங்களில் விபத்து காப்பீடு முகாம்
சிவகங்கை: அனைத்து தபால் நிலையங்களிலும் ஜூன் 30 வரை விபத்து காப்பீடு திட்ட சிறப்பு முகாம் நடைபெறும் என சிவகங்கை கோட்ட தபால் கண்காணிப்பாளர் எஸ்.மாரியப்பன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
தபால் துறையின் கீழ் இயங்கும் இந்திய போஸ்ட் பேமண்ட் வங்கி, பொது காப்பீடு நிறுவனங்களுடன் இணைந்து ஆண்டுக்கு ரூ.500 முதல் 700 வரை குறைவான பிரீமியத்தில் ரூ.10 மற்றும் 15 லட்சத்திற்கான விபத்து காப்பீடு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுஉள்ளது.
இதில் ஆண்டுக்கு ஒரு முறை உடல் பரிசோதனை செய்யும் வசதி, தொலைபேசி மூலம் கணக்கில்லா மருத்துவ ஆலோசனை பெறலாம். விபத்தினால் மரணம், நிரந்தர முழு ஊனம், பகுதி ஊனம் ஏற்பட்டவர்களின் குழந்தைகளின் கல்வி, திருமணம் செலவினங்களுக்கு காப்பீடு நிதி, விபத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நாட்களுக்கு தினப்படியாக நாள் ஒன்றுக்கு ரூ.1000 வீதம் 15 நாட்களுக்கு வழங்கப்படும்.
மேலும் சூப்பர் டாப் அப் மருத்துவ காப்பீடு திட்டம் மூலம் ரூ.2 ஆயிரம்பிரீமியம் கட்டி ரூ.15 லட்சத்திற்கான கூடுதல் மருத்துவ காப்பீட்டை பெறலாம். இதற்கான சிறப்பு முகாம் ஜூன் 30 வரை அனைத்து தபால் அலுவலகங்களிலும் நடைபெற்று வருகிறது என்றார்.
மேலும்
-
விஸ்வரூபம் எடுத்துள்ள சிறுவன் கடத்தல் வழக்கு; கைதான ஏ.டி.ஜி.பி., ஜெயராம் சஸ்பெண்ட்
-
இஸ்ரேலுக்கு தன்னை பாதுகாத்துக் கொள்ளும் உரிமை உண்டு; ஈரான் தான் பிரச்னைக்கு காரணம்; ஜி 7 மாநாட்டில் தீர்மானம்
-
இனியும் இப்படி ஒரு சம்பவம் நடக்கக்கூடாது என்று வேண்டிக்கொள்கிறேன்: விமான விபத்து குறித்து ரஜினி வேதனை பேட்டி
-
இரண்டரை நாட்களில் அணுகுண்டு தயார்; ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலுக்கு உடனடிக் காரணம் இதுதான்!
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 சரிவு; ஒரு சவரன் ரூ.73,600!
-
ஒரே நேரத்தில் 2 காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது: இந்திய வானிலை மையம் தகவல்