'முதல்வருக்கு கருப்புக்கொடி விவசாயிகளை தண்டிப்பதா?'

சென்னை: 'தஞ்சையில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது, எந்த வழக்கும் தொடரக்கூடாது' என, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
தஞ்சை மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான நிலுவைத்தொகையை வழங்க கோரி, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்தனர். தி.மு.க., அரசு, எந்த நடவடிக்கையும் எடுக்காமல், பாராமுகமாக இருப்பதை கண்டித்து, முதல்வருக்கு கருப்புக்கொடி காட்டிய, விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொய்யான தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்து, விவசாயிகளை ஏமாற்றியது; நிலங்களை காக்க போராடிய, திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போட்டது என, நான்கு ஆண்டுகளில் விவசாயிகளுக்கு செய்த துரோகங்கள் போதாதா?
தற்போது, கருப்புக்கொடி போராட்டம் நடத்திய கரும்பு விவசாயிகள் மீதா, அடக்குமுறையை காட்டுவது? நான்கு ஆண்டுகளில் முதல்வர் ஸ்டாலின் போட்ட வேடங்களில், டெல்டாக்காரன் வேடம் பல்லிளிக்கிறது. கைது செய்யப்பட்ட விவசாயிகள் அனைவரையும் விடுதலை செய்து, அவர்களுக்கு கிடைக்க வேண்டிய, நிலுவைத் தொகை கிடைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். போராடிய விவசாயிகள் மீது, தி.மு.க., அரசு எந்த வழக்கும் தொடரக்கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





மேலும்
-
விஸ்வரூபம் எடுத்துள்ள சிறுவன் கடத்தல் வழக்கு; கைதான ஏ.டி.ஜி.பி., ஜெயராம் சஸ்பெண்ட்
-
இஸ்ரேலுக்கு தன்னை பாதுகாத்துக் கொள்ளும் உரிமை உண்டு; ஈரான் தான் பிரச்னைக்கு காரணம்; ஜி 7 மாநாட்டில் தீர்மானம்
-
இனியும் இப்படி ஒரு சம்பவம் நடக்கக்கூடாது என்று வேண்டிக்கொள்கிறேன்: விமான விபத்து குறித்து ரஜினி வேதனை பேட்டி
-
இரண்டரை நாட்களில் அணுகுண்டு தயார்; ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலுக்கு உடனடிக் காரணம் இதுதான்!
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 சரிவு; ஒரு சவரன் ரூ.73,600!
-
ஒரே நேரத்தில் 2 காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது: இந்திய வானிலை மையம் தகவல்