தொகுதி நிர்வாகிகளிடம் முதல்வர் இன்று கருத்து கேட்பு

சென்னை : கவுண்டம்பாளையம், பரமத்தி வேலுார், கிருஷ்ணகிரி தொகுதி நிர்வாகிகளை, சென்னையில் இன்று சந்திக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

சட்டசபை தேர்தல் குறித்து, தொகுதி நிர்வாகிகளிடம் கருத்து கேட்பதற்காக, 'உடன்பிறப்பே வா' என்ற தலைப்பில் சந்திப்பு நிகழ்ச்சியை சென்னை அறிவாலயத்தில், முதல்வர் ஸ்டாலின் கடந்த 13ம் தேதி துவக்கினார்.

சிதம்பரம், விழுப்புரம், உசிலம்பட்டி தொகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகளை சந்தித்து பேசினார். இன்று, கவுண்டம்பாளையம், பரமத்தி வேலுார், கிருஷ்ணகிரி ஆகிய மூன்று சட்டசபை தொகுதிகளின் நிர்வாகிகளை சந்தித்து கருத்து கேட்க உள்ளார்.

Advertisement