முருக பக்தர்கள் மாநாட்டில் அ.தி.மு.க., பங்கேற்பா?

அ.தி.மு.க., ஆட்சியில் நடந்த சில சம்பவங்களுக்கு அப்போது முதல்வராக இருந்த பழனிசாமி முறையாக நடவடிக்கை எடுத்தார். பொள்ளாச்சி வழக்கில் சி.பி.ஐ., விசாரிக்க உத்தரவிட்டு, 'யார் அந்த சார்?' என்பதை கண்டுபிடித்து, தண்டனை வாங்கிக் கொடுத்துள்ளோம். தி.மு.க., அரசு எந்த ஒரு நடவடிக்கைக்கும் உத்தரவிடுவது கிடையாது. தி.மு.க.,தான் யார் அந்த சார்? என்பதை சொல்ல மறுக்கிறது.

மதுரையில், ஹிந்து முன்னணி நடத்தும் முருக பக்தர்கள் மாநாட்டில் பழனிசாமி உத்தரவிட்டால், நாங்களும் பங்கேற்போம். எங்கள் கூட்டணி வலுவாக உள்ளது. மக்களோடு கூட்டணி வைத்துள்ளோம். தேர்தல் நெருங்கும்போது தான், யார் யார் கூட்டணியில் சேருவர் என்பதை கூற முடியும்.

-செல்லுார் ராஜு, முன்னாள் அமைச்சர்

Advertisement