பள்ளியில் அஞ்சல் கிராம சபை 

சிவகங்கை; சிவகங்கை அரு.நடேசன் செட்டியார் நடுநிலை பள்ளியில் 'அஞ்சல் கிராம சபை' கூட்டம் நடந்தது. வட்டார கல்வி அலுவலர் ஜெயா தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் பாண்டியராஜன் முன்னிலை வகித்தார்.

சிவகங்கை தலைமை தபால் நிலைய அலுவலர்வீரபாண்டியன், துணை அலுவலர் மதிவாணன் தபால் சேவைகள், ஆதார் புதுப்பித்தல், மாணவர்களுக்கான அஞ்சலக கணக்கு தொடங்குதல், பெண் குழந்தைகளுக்கான திட்டங்கள், சேவைகள் குறித்து விளக்கம்அளித்தனர்.

அஞ்சலக மேற்பார்வையாளர் நடராஜன், தபால்காரர்கள் விஜயகுமார், பிரியா உள்ளிட்டோர்பங்கேற்றனர்.

Advertisement