ஆட்டோ கட்டணம்; மகளிர் மேம்பாட்டு நிறுவனம் விளக்கம்
சென்னை: தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 50 பெண்களுக்கு, மின் ஆட்டோக்கள் வழங்கப்பட்டன. இதற்கு, 'சார்ஜிங்' செய்வதற்கான வசதியை அரசு ஏற்படுத்தி தராததால், அவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஆட்டோ வுக்கு தினமும் 100 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, மாதம் 5,000 ரூபாய் செலுத்தும்படி, மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூறியதாக பயனாளிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து நேற்று நம் நாளிதழில் செய்தி வெளியானது. அதைத் தொடர்ந்து, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் நேற்று அளித்த விளக்கம்:
அரசு தரப்பில் வழங்கப்பட்டுள்ள மின் ஆட்டோ பராமரிப்பு உள்ளிட்ட செலவினங்களை மேற்கொள்ள, நிதி ஆதாரம் இல்லை. எனவே, அப்பணிகளை மேற்கொள்ள, பயனாளிகளிடம் பகுதி அளவிலான கூட்டமைப்புகள் வாயிலாக கட்டணம் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், இதுவரை எந்த கட்டணமும் வசூலிக்கப்படவில்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
விஸ்வரூபம் எடுத்துள்ள சிறுவன் கடத்தல் வழக்கு; கைதான ஏ.டி.ஜி.பி., ஜெயராம் சஸ்பெண்ட்
-
இஸ்ரேலுக்கு தன்னை பாதுகாத்துக் கொள்ளும் உரிமை உண்டு; ஈரான் தான் பிரச்னைக்கு காரணம்; ஜி 7 மாநாட்டில் தீர்மானம்
-
இனியும் இப்படி ஒரு சம்பவம் நடக்கக்கூடாது என்று வேண்டிக்கொள்கிறேன்: விமான விபத்து குறித்து ரஜினி வேதனை பேட்டி
-
இரண்டரை நாட்களில் அணுகுண்டு தயார்; ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலுக்கு உடனடிக் காரணம் இதுதான்!
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 சரிவு; ஒரு சவரன் ரூ.73,600!
-
ஒரே நேரத்தில் 2 காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது: இந்திய வானிலை மையம் தகவல்