மா.கம்யூ., தெருமுனை பிரசாரம்

குஜிலியம்பாறை; காவிரி நீரை கொண்டு வந்து குளங்களில் நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மா.கம்யூ., சார்பில் லந்தகோட்டை, குஜிலியம்பாறை, மல்லபுரம் என 3 இடங்களில் தெருமுனைப் பிரசாரங்களும், பாளையத்தில் பொதுக்கூட்டமும் நடந்தது.

ஒன்றிய குழு உறுப்பினர் ஜோதிபாசு தலைமை வகித்தார்.

ஒன்றிய செயலர் ஜெயபால், ஒன்றிய குழு தலைவர் தங்கவேல் முன்னிலை வகித்தனர்.

மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம், மாவட்ட செயலாளர் பிரபாகரன், செயற்குழு உறுப்பினர்கள் செல்வராஜ், முத்துசாமி, முன்னாள் ஒன்றிய செயலாளர் ராஜரத்தினம் பங்கேற்றனர்.

Advertisement