சுரங்கனாறு நீர்வீழ்ச்சி நீரை ஒட்டான் குளத்திற்கு கொண்டு வர வலியுறுத்தல்
கூடலுார்; கூடலுார் அருகே சுரங்கனாறு நீர்வீழ்ச்சியில் விழும் தண்ணீரை மீண்டும் ஒட்டான்குளம் கண்மாய்க்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வனத்துறையினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கூடலுார் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் சுரங்கனாறு நீர்வீழ்ச்சி உள்ளது. கேரளாவில் மழை பெய்யும் போது கூடுதலாக தண்ணீர் வரும். இங்கு விழும் தண்ணீர் நீர்வரத்து வாய்க்கால் மூலம் ஒட்டான்குளம் கண்மாய்க்கு வந்து சேரும். 2011ல் நீர்வீழ்ச்சி அருகே ஏற்பட்ட மண்சரிவால் தண்ணீர் திசைமாறி கண்மாய்க்கு வராமல் முல்லைப் பெரியாற்றில் கலந்தது. இதனால் கண்மாய்க்கு வரும் நீர்வரத்து வாய்க்காலின் இரு பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது. சீரமைப்பு பணி செய்து மீண்டும் கண்மாய்க்கு தண்ணீரை கொண்டுவர விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். நீர்வீழ்ச்சி பகுதி வனப்பகுதியில் அமைந்துள்ளதால் வனத்துறையினர் இதற்கு அனுமதி வழங்கவில்லை.
இந்நிலையில் அப்பகுதியில் சீரமைப்பு பணி செய்து மீண்டும் கண்மாய்க்கு தண்ணீரைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட வன அலுவலருக்கு பாரதிய கிசான் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் சதீஷ்பாபு, உறுப்பினர் ஜெயபால், முல்லைச்சாரல் விவசாய சங்க தலைவர் ராஜா உள்ளிட்ட விவசாயிகள் மனு வழங்கி வலியுறுத்தினர்.
மேலும்
-
விஸ்வரூபம் எடுத்துள்ள சிறுவன் கடத்தல் வழக்கு; கைதான ஏ.டி.ஜி.பி., ஜெயராம் சஸ்பெண்ட்
-
இஸ்ரேலுக்கு தன்னை பாதுகாத்துக் கொள்ளும் உரிமை உண்டு; ஈரான் தான் பிரச்னைக்கு காரணம்; ஜி 7 மாநாட்டில் தீர்மானம்
-
இனியும் இப்படி ஒரு சம்பவம் நடக்கக்கூடாது என்று வேண்டிக்கொள்கிறேன்: விமான விபத்து குறித்து ரஜினி வேதனை பேட்டி
-
இரண்டரை நாட்களில் அணுகுண்டு தயார்; ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலுக்கு உடனடிக் காரணம் இதுதான்!
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 சரிவு; ஒரு சவரன் ரூ.73,600!
-
ஒரே நேரத்தில் 2 காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது: இந்திய வானிலை மையம் தகவல்