'ஹரித் யோகா மலையேற்றம்' பயிற்சி

மூணாறு; இடுக்கி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா பகுதியான பருந்துபாறையில் இந்திய இயற்கை மருத்துவம் மற்றும் யோகா பட்டதாரி மருத்துவ சங்கம் சார்பில் 'ஹரித் யோகா மலையேற்றம்' பயிற்சி நடந்தது.

உலக யோகா தினத்தில் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை யோகாவுடன் ஒருங்கிணைக்கும் வகையில் 'ஹரித் யோகா' எனும் திட்டத்தை மத்திய ஆயுஷ் அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது.

அதன்படி பருந்து பாறையில் இந்திய இயற்கை மருத்துவம் மற்றும் யோகா பட்டதாரி மருத்துவ சங்கம் ஆகியோர் சார்பில் கொட்டும் மழையிலும் 'ஹரித் யோகா மலையேற்றம்' பயிற்சி நடந்தது.

இதில் கேரளாவைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட இயற்கை மருத்துவர்கள் பங்கேற்றனர்.

தேசிய இயற்கை மருத்துவ நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் பாபு ஜோசப், இந்திய இயற்கை மருத்துவம் மற்றும் யோகா பட்டதாரி மருத்துவ சங்கம் மாநில தலைவர் தினேஷ் கர்தா, பொது செயலாளர் ஆன்ஸ்மோள் ஜோசப், இணை செயலாளர்கள் சிஜித், பிரதீப்தாமோதரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement