காலிறுதியில் போபண்ணா ஜோடி

லண்டன்: விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர், ஜூன் 30-ஜூலை 13ல் லண்டனில் நடக்கவுள்ளது. இதற்கு தயாராகும் வகையில் பிரிட்டனில் ஆண்களுக்கான சர்வதேச டென்னிஸ் தொடர் நடக்கிறது. இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் போபண்ணா, பெல்ஜியத்தின் சாண்டர் கில்லி ஜோடி, செக் குடியரசின் ஜாகுப், டென் மார்க்கின் ஹோல்கர் ஜோடியை சந்தித்தது.
'டை பிரேக்கர்' வரை சென்ற முதல் இரு செட்டை இரு ஜோடியும் மாறி மாறி வசப்படுத்தின. அடுத்து நடந்த 'சூப்பர் டை பிரேக்கரை' போபண்ணா ஜோடி (10-6) வென்றது. ஒரு மணி நேரம், 41 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் போபண்ணா ஜோடி 7-6, 6-7, 10-6 என வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறியது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
புகழூரில் இன்று உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்
-
இடிக்கப்பட்ட பள்ளி சுற்றுச்சுவரை மீண்டும் கட்ட பெற்றோர் கோரிக்கை
-
மல்லிகை பூ கிலோ ரூ.400க்கு விற்பனை
-
நிறுத்தப்பட்ட அரசு டவுன் பஸ்சை மீண்டும் இயக்க வேண்டுகோள்
-
பொற்பந்தல் அங்கன்வாடி மையம் பயன்பாட்டுக்கு வருவது எப்போது?
-
குளித்தலை பஸ் ஸ்டாண்டில் செயல்படாத 'சிசிடிவி' கேமரா
Advertisement
Advertisement