மல்லிகை பூ கிலோ ரூ.400க்கு விற்பனை

கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம்
பகுதியில், மல்லிகை பூக்கள் கிலோ, 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மகிளிப்பட்டி, உடையந்தோட்டம், காட்டூர், செக்கணம்,

எழுதியாம்பட்டி, தாளியாம்பட்டி ஆகிய பகுதிகளில் விவசாயிகள் பூக்கள் சாகுபடி செய்து வருகின்றனர். சின்ன ரோஜா, விரிச்சிப்பூக்கள், செண்டுமல்லி, மல்லிகை ஆகிய பூக்கள் சாகுபடி நடந்து வருகிறது.


செடிகளில் இருந்து பறிக்கப்படும் பூக்கள் கரூர், குளித்தலை, முசிறி பகுதிகளில் செயல்படும் பூ மார்க்கெட்டுகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது. நேற்று சின்னரோஜா கிலோ, 110 ரூபாய், விரிச்சிப்பூக்கள், 90 ரூபாய், செண்டுமல்லி, 60 ரூபாய், மல்லிகை பூ, 400 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

Advertisement