ஊத்தங்கரையில் பைக் திருடிய 'சிசிடிவி' காட்சி வைரல்
ஊத்தங்கரை, ஊத்தங்கரை அருகே, சின்னகுன்னத்துாரை சேர்ந்தவர் நந்தகோபால், 42. நேற்று முன்தினம் காலை, ஊத்தங்கரை அரசு மருத்துவமனை முன், நிறுத்தியிருந்த அவரது ஹோண்டா சைன் பைக் மாயமானது. அருகிலுள்ள கடையின், 'சிசிடிவி' கேமரா காட்சிகள் வைரலானது. இதில், மர்ம நபர் ஒருவர் நந்தகோபாலின் பைக்கை திருடி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. இது குறித்து நந்தகோபால், ஊத்தங்கரை போலீசில் புகார் அளித்தார். அதன் படி போலீசார் விசாரிக்கின்றனர்.
ஊத்தங்கரையில் கடந்த, 4 ஆண்டுகளுக்கு முன்பு, 10 லட்சத்திற்கு மேல் செலவு செய்து, 60க்கும் மேற்பட்ட, 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தப்பட்டன. அவை போலீசார் பராமரிப்பின்றி பழுதடைந்துள்ளன. இதனால், பைக்கை திருடிச்சென்ற மர்ம நபர் குறித்த விபரங்களை சேகரிக்க முடியாமல், போலீசார் திணறி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆசிரியர்கள் நியமனம் இழுத்தடிப்பால் ரூ.900 கோடி மிச்சம்
-
வருவாய்த்துறையினரின் மனக்குறைதான் என்ன ஜூன் 25 ல் ஒட்டுமொத்த விடுப்பு
-
மாணவ, மாணவியரை ஆபாசமாக படமெடுத்த 2 பேர் சிக்கினர் போலீசாரிடம் ஒப்படைத்த கிராமத்தினர்
-
மூழ்கிய கப்பலிலிருந்து வெளியேறியபிளாஸ்டிக் துகள்களை அகற்ற வழக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
-
திருட்டு டூவீலர்களை விற்ற பா.ஜ.,----ஹி.மு., நிர்வாகிகள் கைது
-
பொது மாறுதல் கலந்தாய்வுக்கு முன்துவங்கியாச்சு 'கவனிப்பு டிரான்ஸ்பர்' அறிவிப்பு தாமதமாகும் பின்னணி என்ன
Advertisement
Advertisement