மின் இணைப்பு கிடைக்காததால் ரேஷன் கடை திறப்பதில் தாமதம்

மதுராந்தகம்:-கருங்குழி பேரூராட்சியில், புதிதாக கட்டப்பட்ட ரேஷன்கடை மின் இணைப்பு இல்லாததால், மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைக்கப்படாமல், பூட்டி வைக்கப்பட்டு உள்ளது.
மதுராந்தகம் அருகேயுள்ள கருங்குழி பேரூராட்சி 15 வார்டுகளை உள்ளடக்கியது. அதில், ஆறாவது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, மதுராந்தகம் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., மரகதம் தன் தொகுதி மேம்பாட்டு நிதியில் 9.40 லட்சம் ரூபாய் ஒதுக்கி புதிதாக ரேஷன் கடை கட்டடம் கட்டப்பட்டது. ஆனால் மின் இணைப்பு வழங்கப்படாமல் பூட்டி வைக்கப்பட்டுள்ளது.
எனவே, துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, மின் இணைப்பு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement