போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தோருக்கு மிரட்டல்: தமிழக அரசுக்கு சீமான் கண்டனம்

சென்னை: கள் இறக்கும் அறப்போராட்டத்திற்கு ஆதரவு அளித்த காரணத்திற்காக, தமிழக நாடார் சங்கம் மற்றும் ஐயா வைகுண்டர் மக்கள் கட்சித் தலைவருக்கு மிரட்டல் விடுத்தது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
நாம் தமிழர் கட்சியின் கள் இறக்கும் அறப்போராட்டத்திற்கு தமிழக நாடார் சங்கம் மற்றும் ஐயா வைகுண்டர் மக்கள் கட்சித் தலைவர் முத்து ரமேஷ் ஆதரவு தெரிவித்த காரணத்திற்காக, சமூக விரோதிகள் சிலர் அவருடைய வீட்டிற்கு சென்று, மிரட்டி அச்சுறுத்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
தமிழர்களின் வாழ்வாதார உரிமையான கள் இறக்கும் உரிமையை மீட்பதற்கு முத்து ரமேஷ் துணை நின்றதை தாங்கிக்கொள்ள முடியாத சிலரின் இத்தகைய அச்சுறுத்தல் கோழைத்தனமானது. அச்சுறுத்தல் செய்தவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் தமிழ்நாடு காவல்துறை இனியும் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கக் கூடாது.
அறவழியில் அமைதியாக நடைபெற்ற கள் இறக்கும் போராட்டத்தின் வெற்றியை பொறுத்துக்கொள்ள முடியாத ஆட்சியாளர்களின் தூண்டுதல் காரணமாகவே இத்தகைய மிரட்டி அச்சுறுத்தும் செயல்கள் நடந்துள்ளது. இதுபோன்ற செயல்கள் இனியும் தொடரக்கூடாது என்று எச்சரிக்கின்றேன்.
இவ்வாறு சீமான் அறிக்கையில் கூறியுள்ளார்.
மேலும்
-
சேலம் ரவுடி ஜான் கொலை வழக்கில் 1,000 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்
-
துணி 'லோடு' ஏற்றிச்சென்ற லாரி சாய்ந்து பைக்கில் சென்ற மொபைல் ஊழியர் பலி
-
கொல்லிமலை அரசு உயர்நிலைப்பள்ளி மாணவியர் 'அன்னாசி அறுவடை' கருவி உருவாக்கி அசத்தல்
-
சிறுமி பாலியல் பலாத்காரம் தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை
-
எப்போ ரோடு போடுவீங்க ஆபீசர்ஸ்? 4 ஆண்டாக வாகன ஓட்டிகள் ஏக்கம் 300 பேர் காயம்; 4 பேர் பலியான அவலம்
-
கும்மிடி பேரூராட்சி சமுதாய கூடம் கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்படுமா?