வாக்காளர் அடையாள அட்டை 15 நாட்களில் வழங்கும் புதிய முறை: தேர்தல் ஆணையம் அறிமுகம்

புதுடில்லி: வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கப்பட்ட 15 நாட்களில், புதிய வாக்காளர் அடையாள அட்டையை பெற வசதியாக புதிய முறை அறிமுகம் செய்துள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வாக்காளர்களின் வசதியை மேம்படுத்தவும், விரைவாக வழங்கும் ஒரு புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்படுகிறது.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஸ்ரீ ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையர்கள் டாக்டர் சுக்பீர் சிங் சந்து மற்றும் டாக்டர் விவேக் ஜோஷி ஆகியோரால் இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதாவது:
வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கப்பட்ட 15 நாட்களுக்குள் வாக்காளர் புகைப்பட அட்டைகளை வழங்க முடியும், இதில் ஒரு வாக்காளர் புதிதாகவோ அல்லது ஏற்கனவே உள்ள வாக்காளர்களின் விவரங்களில் ஏதேனும் மாற்றம் சேர்த்தல் நீக்குதல் ஆகியவை இதில் அடங்கும்.
இது புதிதாகப் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களுக்கும், தங்கள் விவரங்களைப் புதுப்பிக்கும் ஏற்கனவே உள்ள வாக்காளர்களுக்கும் பொருந்தும்.
புதிய முறையில், வாக்காளர் பதிவு அதிகாரியால் அஞ்சல் துறை மூலம் வாக்காளருக்கு அட்டை வழங்கப்படும் வரை, ஒவ்வொரு கட்டத்தையும் நிகழ்நேரக் கண்காணிப்பை உறுதி செய்யும் வகையில், வாக்காளர்களுக்கு எஸ்.எம்.எஸ்., மூலம் அறிவிப்புகள் வழங்கப்படும்.
இவ்வாறு தேர்தல் ஆணையம் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.

மேலும்
-
திருத்தணி முருகன் கோவிலில் ரூ.86 கோடியில் வளர்ச்சி பணி
-
அடுத்த தலைவராக யாருக்கு வாய்ப்பு?
-
கால்நடை உதவி மருத்துவர் இல்லாததால் ஓய்வெடுக்கும் ஆம்புலன்ஸ் வாகனம்
-
கோட்டை மாரியம்மன் மரத்தேர் ஜூலை 7ல் வெள்ளோட்டம்
-
மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு வேல், மயிலுடன் தயாராகும் சட்டை
-
தென்மேற்கு பருவ மழை எதிரொலி கபினியில் 25,000 கனஅடி நீர் திறப்பு