மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு வேல், மயிலுடன் தயாராகும் சட்டை
சேலம், மதுரையில் வரும், 22ல், ஹிந்து முன்னணி சார்பில், முருக பக்தர்கள் மாநாடு நடக்க உள்ளது. அதில் முருக பக்தர்கள் திரளானோர் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள் பயன்படுத்த, சுவாமி முருகனின் அடையாளங்களான, 'வேல், மயில், ஓம்' ஆகியவை, எம்ராய்டரி முறையில் தைத்து, தனித்துவ முறையில் சட்டைகள், சேலத்தில் தயாராகி வருகின்றன.
இதுகுறித்து நெய்க்காரப்பட்டியில் துணி கடை வைத்துள்ள ராஜவேல், 45, கூறியதாவது:
கடந்த, 15 ஆண்டாக ரெடிமேட் சட்டைகள் தயாரித்து விற்கிறோம். முருக பக்தர்கள் மாநாட்டுக்கு, தமிழ் கடவுள் முருகனின் அடையாளங்களான வேல், மயில், ஓம் எழுத்துகள் இணைந்து, காட்டன் மற்றும் லெனின் துணியில் தனித்துவ எம்ப்ராய்டரி ஓவியத்துடன், வெள்ளை நிற சட்டைகள் தயாரித்து, ஒன்று, 500 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இச்சட்டைகளுக்கு நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
வெள்ளலுாரில் ரோடு படுமோசம் பொறுமையிழந்த மக்கள் மறியல்
-
குறைதீர் முகாமில் எஸ்.பி., மனுக்கள் பெற்றார்
-
சவாரிக்கு அழைத்துச் சென்று வடமாநிலத்தவரிடம் வழிப்பறி ஆட்டோ ஓட்டுனர்கள் மூவர் கைது
-
சுந்தரமூர்த்தி நாயனார் கோவில் திருப்பணிகள் குறித்து ஆய்வு
-
பழுதாகி நின்ற மினி பஸ் போக்குவரத்து நெரிசல்
-
நில அளவை பயிற்சி மையம்