கோட்டை மாரியம்மன் மரத்தேர் ஜூலை 7ல் வெள்ளோட்டம்
சேலம், சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவிலுக்கு தங்கத்தேர் உள்ளது. மரத்தேர் இல்லாததால், உபயதாரர்கள் மற்றும் திருக்கோவில் நிதி, ஒரு கோடி ரூபாய் மதிப்பில், 16 அடி அகலம், 37 அடி உயரத்தில், மரத்தேர் செய்யும் பணி கடந்த ஆண்டு தொடங்கியது. இதற்கு, 6 அடி விட்டத்தில், 4 சக்கரங்கள், 5 அடி விட்டத்தில் இரு சக்கரங்கள், 3 ஆக்சில்கள், திருச்சி, 'பெல்' நிறுவனத்தில் தயார் செய்து எடுத்து வந்து, 10 நாட்களுக்கு முன் பொருத்தப்பட்டது. தேரில் சாரம் கட்டுதல், அலங்கார துணி, கலசம், பொம்மைகள் வைப்பது என இன்னும், 10 லட்சம் ரூபாய் பணி மீதமுள்ளது.
பெரிய மாரியம்மன் கோவிலின் முக்கிய பண்டிகையான ஆடித்திருவிழாவில், நடப்பாண்டு தேரோட்டம் முதல்முறை நடத்தப்பட உள்ளது. அதனால் ஜூலை, 7ல் புது மரத்தேர் வெள்ளோட்டம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. அப்போது கோவிலில் இருந்து, முதல் அக்ரஹாரம், தேர்வீதி, 2ம் அக்ரஹாரம், பட்டைக்கோவில், சின்னக்கடைவீதி, பஜார் தெரு வழியே மீண்டும் கோவிலை அடையும் என, கோவில்
நிர்வாகிகள் தெரிவித்தனர்.
மேலும்
-
மனைவிக்கு தங்கத்தில் தாலி வாங்க ஆசை: 93 வயது முதியவருக்கு கிடைத்த 'சர்ப்ரைஸ்'
-
மாணவர்களின் அடிப்படை கற்றல் மேம்பாட்டுக்கு கோவையில் பயிற்சி
-
வல்லத்தில் உழவரை தேடி திட்டம் சிறப்பு முகாம்
-
சிறுவாணி அணையில் 50 செ.மீ., மதகு திறந்து தண்ணீர் வெளியேற்றம்
-
பஸ் சக்கரத்தில் சிக்கி ஒருவர் மரணம்
-
காட்சிப் பொருளான இ லவச உடற்பயிற்சி நிலைய ம் மீண்டும் திறக்க இளைஞர்கள் கோரிக்கை